என்னை நேசிக்க
நிலவைக் கவர்ந்த
வானை நேசிக்கிறாய் !
நதியைக் கவர்ந்த
கடலை நேசிக்கிறாய் !
பறவையைக் கவர்ந்த
ஏரியை நேசிக்கிறாய் !
வண்டைக் கவர்ந்த
மலரை நேசிக்கிறாய் !
நூலிழையைக் கவர்ந்த
தறியை நேசிக்கிறாய் !
இசையைக் கவர்ந்த
வீணையை நேசிக்கிறாய் !
மங்கையே !
உன்னைக் கவர்ந்த என்னை
நேசிக்க ஏன் தெரியவில்லை ?
No comments:
Post a Comment