17 Jun 2012


தமிழ்ப் பழமொழிகள் -

·  ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை.
·  ஆடையில்லாதவன் அரை மனிதன்.
·  ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
·  ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
·  ஆரால் கேடு, வாயால் கேடு.


·  ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
·  ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
·  ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைபபூ சக்கரை.
·  ஆழமறியாமல் காலை இடாதே.
·  ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
·  ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
·  ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
·  ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
·  ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
·  ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
·  ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
·  ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
·  ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
·  ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
·  ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
·  ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
·  ஆனைக்கும் அடிசறுக்கும்.
·  ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
·  ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.

No comments:

Post a Comment