11 Jun 2012


தமிழ்ப் பழமொழிகள் -

·  அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
·  அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
·  அகல உழுகிறதை விட ஆழ உழு.
·  அகல் வட்டம் பகல் மழை.


·  அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
·  அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
·  அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
·  அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
·  அடக்கமே பெண்ணுக்கு அழகு.
·  அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
·  அடாது செய்தவன் படாது படுவான்.
·  அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
·  அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
·  அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.
·  அடியாத மாடு படியாது.
· அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
·  அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
·  அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
·  அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
·  அந்தி மழை அழுதாலும் விடாது.
·  அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
·  அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
·  அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
·  அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
·  அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
·  அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
·  அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
·  அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
·  அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்
·  அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
·  அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
·  அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
·  அறச் செட்டு முழு நட்டம்.
·  அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
·  அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.
·  அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
·  அறமுறுக்கினால் அற்றும் போகும்.
·  அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
·  அறிய அறியக் கெடுவார் உண்டா?
·  அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
·  அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
·  அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
·  அறிவு இல்லார்தமக்கு ஆண்மையுமில்லை.
·  அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
·  அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்கவேண்டும்.
·  அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
·  அற்ப அறிவு அல்லற் கிடம்.
·  அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
·  அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
·  அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
·  அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
·  அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

No comments:

Post a Comment