24 Jun 2012

Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ,



·  இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
·  இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
·  இஞ்சி இலாபம் மஞ்சளில்.
·  இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
·  இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
·  இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
·  இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
·  இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
·  இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
·  இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
·  இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
·  இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை; இராச திசையில் கெட்டவணுமில்லை.
·  இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
·  இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை?
·  இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
·  இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
·  இருவர் நட்பு ஒருவர் பொறை.
·  இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
·  இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
·  இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
·  இளங்கன்று பயமறியாது.
·  இளமையில் கல்.
·  இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
·  இளமையில் கல்வி சிலையில் எழுத்து.
·  இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
·  இறங்கு பொழுதில் மருந்து குடி.
·  இறுகினால் களி , இளகினால் கூழ்.
· இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
·  இறைக்கிற ஊற்றே சுரக்கும்.
·  இனம் இனத்தோடே, வெள்ளாடு தன்னோடே.
·  இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
·  ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
·  ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
·  ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
· ஈர நாவிற்கு எலும்பில்லை.                    

No comments:

Post a Comment