Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - இ, ஈ
· இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
· இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
· இஞ்சி இலாபம் மஞ்சளில்.
· இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
· இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
· இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
· இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
· இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
· இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
· இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
· இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
· இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை; இராச திசையில் கெட்டவணுமில்லை.
· இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
· இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை?
· இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
· இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
· இருவர் நட்பு ஒருவர் பொறை.
· இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
· இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
· இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
· இளங்கன்று பயமறியாது.
· இளமையில் கல்.
· இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
· இளமையில் கல்வி சிலையில் எழுத்து.
· இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
· இறங்கு பொழுதில் மருந்து குடி.
· இறுகினால் களி , இளகினால் கூழ்.
· இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
· இறைக்கிற ஊற்றே சுரக்கும்.
· இனம் இனத்தோடே, வெள்ளாடு தன்னோடே.
· இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
· ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
· ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
· ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
· ஈர நாவிற்கு எலும்பில்லை.
No comments:
Post a Comment