22 Jul 2012


தமிழ்ப் பழமொழிகள் - , , , ஒள

·  ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
·  ஐந்திலே வளையாதது, ஐம்பதிலே வளையுமா?
·  ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.
·  ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
·  ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
·  ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்.
·  ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
·  ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
·  ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை.
·  ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுக்கவா?
·  ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
·  ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்.
·  ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
·  ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
·  ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
·  ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
·  ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
·  ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
·  ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
·  ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
·  ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம்.
·  ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
·  ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
·  ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
·  ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
·  ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
·  ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
·  ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

No comments:

Post a Comment