தமிழ்ப் பழமொழிகள் - ஐ, ஒ, ஓ, ஒள
· ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
· ஐந்திலே வளையாதது, ஐம்பதிலே வளையுமா?
· ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.
· ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
· ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
· ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்.
· ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
· ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
· ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை.
· ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுக்கவா?
· ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
· ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்.
· ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
· ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
· ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
· ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
· ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
· ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
· ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
· ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
· ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம்.
· ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
· ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
· ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
· ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
· ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
· ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
· ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
No comments:
Post a Comment