தமிழ்ப் பழமொழிகள் - எ, ஏ
எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
· எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
· எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
· எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?
· எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
· எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
· எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
· எண்ணிச் செய்கிறவன் கெட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
· எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
· எண்ணை முந்துதோ திரி முந்துதோ?
· எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
· எதார்த்தவாதி வெகுசன விரோதி.
· எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
· எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
· எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
· எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
· எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா.
· எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
· எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
· எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்.
· எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
· எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
· எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
· எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
· எலி அழுதால் பூனை விடுமா?
· எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
· எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
· எலி வளையானாலும் தனி வலை வேண்டும்.
· எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
· எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் தூக்குகிறவர் யார்?
· எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
· எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்.
· எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
· எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
· எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.
· எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
· எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்.
· எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
· எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
· எறும்பு ஊர கல்லுந் தேயும்.
· எறும்புந் தன் கையால் எண் சாண்.
· ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
· ஏதென்று கேட்பாருமில்லை, எடுத்துப் பிடிப்பாருமில்லை.
· ஏரி நிறைந்தால் கரை கசியும்.
· ஏருழுகிறவன் இளப்பமானால், எருது மச்சான் முறை கொண்டாடும்.
· ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
· ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை.
· ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.
· ஏழைபேச்சு அம்பலம் ஏறாது.
· ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
No comments:
Post a Comment