15 Jul 2012



தமிழ்ப் பழமொழிகள் - ,

 எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
·  எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
·  எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
·  எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே.


·  எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?
·  எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
·  எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
·  எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
·  எண்ணிச் செய்கிறவன் கெட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
·  எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
·  எண்ணை முந்துதோ திரி முந்துதோ?
·  எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
·  எதார்த்தவாதி வெகுசன விரோதி.
·  எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
·  எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
·  எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
·  எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
·  எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா.
·  எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
·  எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
·  எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்.
·  எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
·  எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
·  எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
·  எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
·  எலி அழுதால் பூனை விடுமா?
·  எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
·  எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
·  எலி வளையானாலும் தனி வலை வேண்டும்.
·  எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
·  எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் தூக்குகிறவர் யார்?
·  எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
·  எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்.
·  எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
·  எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
·  எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.
·  எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
·  எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்.
·  எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
·  எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
·  எறும்பு ஊர கல்லுந் தேயும்.
·  எறும்புந் தன் கையால் எண் சாண்.
·  ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
·  ஏதென்று கேட்பாருமில்லை, எடுத்துப் பிடிப்பாருமில்லை.
·  ஏரி நிறைந்தால் கரை கசியும்.
·  ஏருழுகிறவன் இளப்பமானால், எருது மச்சான் முறை கொண்டாடும்.
·  ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
·  ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை.
·  ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.
·  ஏழைபேச்சு அம்பலம் ஏறாது.
·  ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.

No comments:

Post a Comment