சொர்க்கத்தில் பில்
ஒருவன் இறந்த பிறகு சொர்க்கத்திற்குப் போகிறான். அங்கே ஒரு டிவைன் கேண்டீன் இருக்கிறது. உள்ளே போகிறான். விதவிதமான திண்பண்டங்கள், பலகாரங்கள், சுவீட் காரங்கள் இருக்கின்றன.
விலைப்பட்டியலைப் பார்க்கிறான்; அதிக விலை! தலையைச் சுற்றுகிறது.
கல்லாப் பெட்டியில் இருப்பவன் சொல்கிறான்:
“நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். பில் உங்களுக்குத் தரப்படாது. உங்கள் மகன் வரும்போது அந்தப் பில் தரப்படும்”
அதனால் இவனும் போய் உட்கார்ந்து மூக்குப் பிடிக்க சாப்பிட்டுவிட்டுத் திருப்தியோடு வெளியே வருகிறான்.
பில் தரப்படுகிறது.
பார்க்கிறான் - 10,000 ரூபாய்.
அவனுக்கே அதிர்ச்சி.
சாப்பிட்டது 1000 ரூபாய் கூட இருக்காது. பில் இல்லை என்கிறார்கள். இப்போது அதற்குப் பத்தாயிரம் ரூபாய் பில் என்கிறார்கள்.
“சொர்க்கத்தில் அநியாயம்” என்கிறான்.
அதற்கு அந்த ஹோட்டல்காரன் விளக்குகிறான்:
“நீங்கள் கேட்டது சரிதான். உங்கள் பில் 1000 ரூபாய்தான் வருகிறது. அதை உங்கள் மகன் வரும்போது அவரிடம்தான் கொடுத்து வசூலிப்போம்”
“அப்படி என்றால் இது?” என்றான் இவன்.
“இது உங்கள் அப்பா சாப்பிட்டுவிட்டுப் போன பில்” என்றான் ஹோட்டல்காரன்.
விலைப்பட்டியலைப் பார்க்கிறான்; அதிக விலை! தலையைச் சுற்றுகிறது.
கல்லாப் பெட்டியில் இருப்பவன் சொல்கிறான்:
“நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். பில் உங்களுக்குத் தரப்படாது. உங்கள் மகன் வரும்போது அந்தப் பில் தரப்படும்”
அதனால் இவனும் போய் உட்கார்ந்து மூக்குப் பிடிக்க சாப்பிட்டுவிட்டுத் திருப்தியோடு வெளியே வருகிறான்.
பில் தரப்படுகிறது.
பார்க்கிறான் - 10,000 ரூபாய்.
அவனுக்கே அதிர்ச்சி.
சாப்பிட்டது 1000 ரூபாய் கூட இருக்காது. பில் இல்லை என்கிறார்கள். இப்போது அதற்குப் பத்தாயிரம் ரூபாய் பில் என்கிறார்கள்.
“சொர்க்கத்தில் அநியாயம்” என்கிறான்.
அதற்கு அந்த ஹோட்டல்காரன் விளக்குகிறான்:
“நீங்கள் கேட்டது சரிதான். உங்கள் பில் 1000 ரூபாய்தான் வருகிறது. அதை உங்கள் மகன் வரும்போது அவரிடம்தான் கொடுத்து வசூலிப்போம்”
“அப்படி என்றால் இது?” என்றான் இவன்.
“இது உங்கள் அப்பா சாப்பிட்டுவிட்டுப் போன பில்” என்றான் ஹோட்டல்காரன்.
-நீதியரசர் எம். கற்பகவிநாயகம் எழுதிய வாழ்க்கை ஒரு சவால் -
சந்தியுங்கள் நூலிலிருந்து.
No comments:
Post a Comment