Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - உ, ஊ
· உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
· உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
· உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.
· உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
· உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
· உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
· உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
· உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே.
· உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்.
· உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
· உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
· உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
· உதட்டில் உறவு உள்ளத்தில் பகை.
· உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
· உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
· உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
· உயிர் காப்பான் தோழன்.
· உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
· உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
· உலோபிக்கு இரட்டை செலவு.
· உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
· உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
· உளவு இல்லாமல் களவு இல்லை.
· உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
· உள்ளது போகாது இல்லது வாராது.
· உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
· உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்?
· உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.
· ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
· ஊணுக்கு முந்துவான் வேலைக்குப் பிந்துவான்.
· ஊண் அற்றபோது உடலற்றது.
· ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
· ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
· ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
· ஊருடன் ஒட்டி வாழ்.
· ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்.
· ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல்.
No comments:
Post a Comment