1 Jul 2012

Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ,

·  உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
·  உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
·  உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.
·  உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
·  உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
·  உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
·  உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
·  உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே.
·  உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்.
·  உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
·  உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
·  உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
·  உதட்டில் உறவு உள்ளத்தில் பகை.
·  உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
·  உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
·  உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
·  உயிர் காப்பான் தோழன்.
·  உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
·  உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
·  உலோபிக்கு இரட்டை செலவு.
·  உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
·  உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
·  உளவு இல்லாமல் களவு இல்லை.
·  உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
·  உள்ளது போகாது இல்லது வாராது.
·  உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
·  உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்?
·  உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.
·  ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
·  ஊணுக்கு முந்துவான் வேலைக்குப் பிந்துவான்.
·  ஊண் அற்றபோது உடலற்றது.
·  ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
·  ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
·  ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
·  ஊருடன் ஒட்டி வாழ்.
·  ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்.
·  ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல்.

No comments:

Post a Comment