5 Aug 2012


தமிழ்ப் பழமொழிகள் - கா

·  காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும், காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
·  காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
·  காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
·  காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
·  காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
·  காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
·  காணி ஆசை கோடி கேடு.
·  காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
·  காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
·  காப்பு சொல்லும் கை மெலிவை.
·  காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
·  காய்த்த மரம் கல் அடிபடும்.
·  காய்ந்தும் கெடுத்தது, பெய்தும் கெடுத்தது.
·  காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
·  காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
·  கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் 
கொடையும் இல்லை
·  காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
·  காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்.
·  காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
·  காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
·  காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.
·  காற்றில்லாமல் தூசி பறக்குமா?
·  காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
·  காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.

No comments:

Post a Comment