தமிழ்ப் பழமொழிகள் - கா
·
காசுக்கு ஒரு
குதிரையும் வேண்டும், காற்றைப் போலப்
பறக்கவும் வேண்டும்.
·
காடு
காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன்
அடைவான்.
·
காட்டுக்கு எறித்த
நிலாவும் கானலுக்குப் பெய்த
மழையும்.
·
காட்டு
வாழை
வந்தால் வீட்டு
வாழ்வு
போகும்.
·
காட்டை
வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு
பிடுங்கப் பயமா?
·
காண
ஒரு
தரம்
கும்பிட ஒரு
தரமா?
·
காணி
ஆசை
கோடி
கேடு.
·
காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
·
காற்ற
ஊசியும் வாராது
காணுங்
கடைவழிக்கே.
·
காப்பு
சொல்லும் கை
மெலிவை.
·
காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்
நிறம்.
·
காய்த்த மரம்
கல்
அடிபடும்.
·
காய்ந்தும் கெடுத்தது, பெய்தும் கெடுத்தது.
·
காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
·
காரியம் பெரிதோ
வீரியம் பெரிதோ?
·
கார்த்திகை பின்
மழையும் இல்லை,
கர்ணனுக்குப்பின்
·
காலம்
செய்கிறது ஞாலம்
செய்யாது.
·
காலம்
போம்
வார்த்தை நிற்கும், கப்பல்
போம்
துறை
நிற்கும்.
·
காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க
உழைப்பும்.
·
காலளவே
ஆகுமாம் கப்பலின் ஓட்டம்,
நூலளவே
ஆகுமாநுண்சீலை.
·
காவடிப் பாரம்
சுமக்கிறவனுக்குத் தெரியும்.
·
காற்றில்லாமல் தூசி
பறக்குமா?
·
காற்று
உள்ளபோதே தூற்றிக்கொள்.
· காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.
No comments:
Post a Comment