9 Sept 2012


தமிழ்ப் பழமொழிகள் - கெ, கே

·  கெடுக்கினும் கல்வி கேடுபடாது.
·  கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.
·  கெடுவான் கேடு நினைப்பான்.
·  கெட்டாலும் கெட்டி கெட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
·  கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
·  கெட்டும் பட்டணம் சேர்.
·  கெண்டையைப் போட்டு வராலை இழு.
·  கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
·  கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
·  கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
·  கேட்டதெல்லாம் நம்பாதே? நம்பியதெல்லாம் சொல்லாதே?
·  கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
·  கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.

No comments:

Post a Comment