28 Oct 2012


தமிழ்ப் பழமொழிகள் - , சா

·  சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.
·  சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி.
·  சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
·  சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
·  சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
·  சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும்.
·  சருகைக் கண்டு தணலஞ்சுமா?
·  சர்க்கரை என்றால் தித்திக்குமா?
·  சர்க்கரை என்று சொன்னால் தித்திக்குமா?
·  சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
·  சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
·  சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
·  சாண் ஏற முழம் சறுக்கிறது.
·  சாது மிரண்டால் காடு கொள்ளாது.
·  சித்திரமும் கைப்பழக்கம்.
·  சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
·  சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி.

No comments:

Post a Comment