21 Oct 2012


தமிழ்ப் பழமொழிகள் - கோ

  கோள் சொல்பவனைக் கொடுந்தேள் என நினை.
  கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
  கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
  கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
  கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
  கோபம் சண்டாளம்.
  கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
  கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
  கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
  கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
  கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
  கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.

No comments:

Post a Comment